நான் இங்கே பதிவிடும் பதிவுகளில் , எனது சொந்த ஆக்கம், மற்றவர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட ஆக்கம் , ரசித்தவை , அனுபவித்தவை, படித்தவை, மற்றும் எனக்கு எதாவது ஒரு தருணத்தில் உபயோகப்படும் என நான் நினைக்கும் விடயங்கள் (மற்றவரின் ஆக்கங்கள்) போன்ற அனைத்தும் அடங்கும்.



தூற்றுபவர் தூற்றட்டும் போற்றுபவர் போற்றட்டும், நான் எனது வழியில் முன்னேறி செல்வேன்.

Tuesday, October 25, 2011

உக்ரைன் பயணம் பார்ட் 3 (கொழும்பு - டெல்லி )

 உக்ரைன் பயணம் பார்ட் 3 (கொழும்பு - டெல்லி )



வணக்கம் மக்காஸ் எப்படி இருக்கீங்க ????? தமிழ் மணம் சண்டை எல்லாம் எப்படி போகுது ???


ஹிஹி குசலம் விசாரிக்கனுமாமே அதான் இப்படி எல்லாம்.......



அப்புறம் என்ன விசயம் எண்டு கேக்குரின்களா?  விசயம் பெருசா ஒன்னும் இல்லைங்கோ....... நான் உக்ரைன் போன கதைய சொல்லலாம் எண்டு தான் வண்தேனுங்கோ ,,,


இந்த விசயம் பத்தி ஏற்கனவே ரெண்டு பதிவு போட்டாச்சு... அத படிக்கனும்னா  இங்க கிளிக்குங்க ......1,2



நான் டெல்லி போனது வர உங்களுக்கு சொல்லிட்டேன்,,,,,

இப்போ சொல்லப்போறது டெல்லி ல நடந்த விசயங்கள் பத்தி..........





டான் டான் டான் டான் டான் எண்டு நைட்டு பன்னிரண்டு மணி அடிக்குற நேரத்துல, நாங்க டெல்லி ல கால்  வாச்சம்.(ஆமா இவரு நீல்  ஆம்ஸ்ட்ராங் பாரு கால்  வச்சாராம்)






அப்புறம் விமான நிலையத்துல வழக்கமான சோதினை எல்லாம் முடிச்சிட்டு அங்கேயே இருக்க எயார்டெல் பூத் ல நம்ம வீட்டுக்கு கால் பண்ணி நம்ம சுகமா(லக்மாளி கூட) வந்து சேர்ந்தத சொல்லியாச்சு


அப்போல்லாம் இலங்கைல எயார்டெல் இல்லை  ஆனா வெகு சீக்கிரம் இலங்கைக்கு வருவம் எண்டு அறிவிச்சு இருந்தாங்க

அதனாலேயே எயார்டெல் மேல ஒரு காதல் வந்திட்டு, சோ எயார்டெல் ல பேசினது ஏதோ லாற்றி அடிச்ச மாதிரி சந்தோசம்.......



அப்புறம் விமானநிலையம் உள்ளே இருக்க ஏதோ ஒரு டேக்சி சர்வீஸ் ல நாங்க போகவேண்டிய இடமான டெல்லி ரெயில்வே ஸ்டேசன் கு போறதுக்கான டேக்சி புக் பண்ணினம்,

அவனும் காச வாங்கிக்கிட்டு, வெளிய போங்க, மஞ்சள் கலருல டாட்டா இண்டிகோ நிக்கும், இது தான் டிரைவர ட நம்பர் எண்டு சொல்லி ஒரு ரசீது தந்தான்....


அந்த ரசீதையும் பாக்கெட்டுல பத்திரப்படுதிட்டு, விமான நிலையத்த சுதி பாக்கணுமே எண்டு பீட்டர் கிட்ட சொன்னேன்,(நமக்கு விடுப்பு பாக்குரது எண்டால்  அலாதி பிரியம்)


ஆனா என்கூட  வந்த ரெண்டு மாடுங்களும் நித்தா வருது சோ போகலாம் நு சொல்லிட்டாங்க (கிராதகா)
(ஏற்கனவே 2 ஜீவனும் பிளைட் ல செம தூக்கம்)




அப்புறம் என்ன நான் என்னட மூஞ்சிய  அஷ்டகோணல் ஆக்கிட்டு வெளிய வரவே மனசில்லாம கார் பார்கிங் போனம்,


முதன் முதலா வெளிநாடு வந்த சந்தோசம், திரும்புற பக்கமெல்லாம் ஹிந்தி மாலு , அதுல பாதி சீக்கியர் , பாக்கவே சூப்பரா இருந்துது டெல்லி விமான நிலையம்,

ஆனா அந்த ரெண்டு சோரன கெட்ட ஜென்மத்தால என்னட பராக்கு பாக்குற ஆசையெல்லாம் தவிடு  பொடியா போயிட்டு :(



அப்புறமா வெளிய வந்து பாத்தா ............ ஆத்தா.............. பாக்குற டேக்சி எல்லாமே மஞ்சள் கலருல தான் இருந்துது .. இது என்ன கொடுமைடா  எண்டு நம்ம டாட்டா இண்டிகோ வ தேடினா.......


அது ஒரு ஓரத்துல நின்னுது, டிரைவர் அழகா சிகரட் புகச்சிட்டு நின்னான்..........


ரசீத அவன்கிட்ட காட்டி , நாங்க மூணு பேரும் பின் சீட்லயும் பீட்டர் முன் சீட்லயும் ஏறினாரு...


அப்புறம் என்ன காரு சும்மா ஜிவ் எண்டு பரந்துது.... ஆகா இப்படி போன 5 நிமிசத்துல போயிடலாமே எண்டு நினைக்கும் போதே.... மெயின் ரோடு வந்துச்சா.......


அப்பத்தான் தெரிஞ்சுது கொழும்பு ட்ராபிக் அ விட டெல்லி ட்ராபிக் அதிக அதிக அதிகம் எண்டு.....

அப்புறம் இஞ்ச பை இன்ச் ஆ ரோடு அளந்தான் அந்த டிரைவர்..........

 நம்ம தோழமைங்க ரெண்டும் காருள் தூக்கம்....... பீட்டரும் நல்ல தூக்கம்....
நான் மட்டும் தான் அந்த டிரைவர் கூட நமக்கு தெரிஞ்ச இங்கிளிபீசு ல மொக்க போட்டேன்....




அப்புறம் ஒரு மாதிரி ரயில்வே ஸ்டேசன் கிட்ட வந்தம் ...


அப்படியே, அங்க இருக்க ஒரு மேம்பாலம் (வாரணம் ஆயிரம் ல சூர்யா கஞ்சா அடிக்குற பாலம்) தாண்டி இருக்க ரெண்டாவது ரோட்டு ல ஏதோ கிரசென்ட் டெலுக்ஸ் என்ட ஹோட்டல் ல
கார் நின்னுச்சு,


அப்புறம் நானுனம் பெரிய கஷ்டப்பட்டு நான் கொண்டு போன லக்கேஜ் எல்லாம் தூக்கிட்டு ஹோட்டல் உள்ள போனம், அப்போ ஒருத்தன் ஓடி வந்து எங்க லக்கேஜ்ஜ் எல்லாம் வாங்கினான்,

(அடடா நம்மக்கு ஒரு வேலக்கரனா எண்டு சந்தோசப்பட்டேன்)


வாழ்க்கைல முதன் முறையா ஒரு ஹோட்டல் ல ரூம் போட்டு தங்குரம் என்ட சந்தோசமும், முதல் அனுபவம் இன்னும் எவளவோ சொல்லலாம்,.....


நானும் மத்த ரெண்டு ஜீவனும் ஒரு ரூம் ல. பீட்டர் இன்னொரு தனி ரூம் ல.


எங்க ரூம் ல ரெண்டு கட்டில் இருந்துது, ஒன்னு டபல் பெட், மத்தது சிங்கள் பெட்.......


ஹிஹி உங்களுக்கு தான் தெரியுமே நான் எப்பவும் யுனிக் எண்டு,

 சோ நான் சிங்கள் பெட் ல என்ட பெட்டியெல்லாம் வச்சிட்டு, குளிக்க போயிட்டேன்..(அவங்க குளிச்ச்சு  நாரடிச்சிடுவாங்க, அதான் நான் முந்திகிட்டேன்)



குளிச்சிட்டு வந்து பாத்தா நம்ம பீட்டரு டெல்லி ஸ்பெசல் சப்பாத்தி அண்ட் பருப்பு  கறி ஆர்டர் குடுத்து வாங்கி வச்சிருந்தாரு......


நானும் குளிச்ச அலுப்பு ல அவங்க குளிக்குற கெப் ல அஞ்சு (சும்மா சொல்ல கூடாது செம டேஸ்ட்)  சப்பாத்திய முழுங்கிட்டு சொர்கலோகத்துக்கு போயிட்டேன்
( கனவுல லக்மாளி )


=======================================================================



விடிய காலம்பர எழும்பி  உக்ரைன் எம்பெச்சி போறதுக்கு தயாரானோம், (அந்த ரெண்டுபேரும் கோட் சூட் போட்டுகிட்டங்க)

நான் வழக்கம் போல அந்த நீல கலருல போனேன்... இந்த முறை ஹோட்டல் ல எங்களுக்காக ஒரு ஸ்கார்பியோ  புக் பண்ணி இருந்தாரு பீட்டரு.....


(இந்தியா விட்டு போகும் வர அந்த காரு தான் நம்ம தோழன்)

 அப்போ தான் சிங் இஸ் கிங்  படம் வந்திருந்துது, அ தனால எப்பவும் எங்க காருல அந்த படத்து பாட்டு தான் போகும்....... 













நான் காலையிலேயே பிரைட் ரயிஸ் ஆர்டர் பண்ணி சாப்பிட்டேன்,
(அந்த ரெண்டு ஜீவன்  பத்தியும் கணக்கு எடுக்குறதே இல்ல எண்டு முடிவு பண்ணிட்டேன்)

(ஏன்னா அவங்க கொஞ்சம் ரேசெர்வ் டைப் )


அவங்க நூடில்ஸ் ஆர்டர் பண்ணி சாபிட்டங்க..... நான் கீழ போய் காருல எனக்கு தேவைப்பட்ட விண்டோ சீட் ல இருந்தேன்.....

 அவங்களும் வந்ததும், கார் நேர ஒரு மெடிகல் சென்டர் ல போய் நின்னுது,(கச்சேரி ஆரம்பம்)




உள்ள போனா ஒரு கண்ணாடி போட்ட டா(dog)க்குட்டறு  நின்னாங்க.....

தனித்தனியா ஒவ்வொருவரா உள்ள கூப்பிட்டு (ஆவ்வ்வ்)

என்னட முறை வந்துது............ பயந்துகிட்டே உள்ள போனேன்....


நான் பயந்தது நடந்துது...........................


ஒரு பெரிய ஊசி போட்டு இரத்தம் டெஸ்ட் பண்ணினாங்க .......   அவ்வளவு தான்...

சின்னதுல இருந்தே எனக்கு இருக்க பழக்கம்.....


தல சுத்திச்சு,,,, அங்கேயே பத்து நிமிஷம் தூங்கிட்டேன்............( இது தான் அந்த பழக்கம் )





அப்புறம் மிச்ச மீதி இருந்த டெஸ்ட் எல்லாம் முடிச்சிட்டு ரிப்போர்ட் வாங்கிட்டு எம்பசி போனோம்........



அங்க தான் ஆரம்பிச்சுது வாழ்வுல  மறக்க முடியாத நிகழ்வுகள் எல்லாம்.......




எம்பசி ல எங்களைப் போலவே நெறைய பேரு கைல பயில் வச்சிட்டு டெண்சென் ஆ இருந்தாங்க............


பத்து பத்து பெற உள்ள விட்டாங்க.... நல்ல வேல நான் உள்ள போகும்போது அந்த ரெண்டு ஜீவனும் வரல.....

உள்ள போன ஒரே ஆனந்த இன்பம் பொங்கிச்சு (கலர் கலரா வட நாட்டு குட்டிங்க ஒரு ஆறேழு பேர் நின்னாங்க)

அப்புறம் எனக்கு இன்டர்வியு நடந்துது.......

இதுக்காக இரவு பகலா படிச்சிட்டு போனேன், ஆனா அங்க என்கிட்டே கேட்ட கேள்வி என்ன தெரியுமா?












இலங்கையில் சனாதிபதி யாரு ?

இலங்கையின் சனத்தொகை எவ்வளவு.?


இப்படி ரெண்டே ரெண்டு மொக்க கேள்விய கேட்டுட்டு (அவங்களுக்கே தெரிஞ்சிட்டு நான் மொக்க எண்டு)

இருங்க ரிசெல்ட் சொல்றோம் எண்டு சொன்னாங்க.......



இங்க தான் ஆரம்பிச்சுது அந்த இனிமை......


நான் போய் ஒரு வாங்குல இருந்தேனா...

என்னட முதுகுப்பக்கம் ஒரு பொண்ணு இருந்துச்சா....

எனக்கு பத்திகிச்சா.....

நான் சாரி சொன்னேனா.....

அவா இட்ஸ் ஓகே சொன்னாளா.....


நான் பல்லு இழிச்செனா......



அவா என்ன பத்தி கேட்டாளா.............

நான் அவல பத்தி கேட்டேனா .......

போன் நம்பர் வாங்கிகிட்டமா.............


(அப்போ ஆரம்பிச்ச பழக்கம் நான் இலங்கை வரும் வர உக்ரைன் ல அந்த பொண்ணு என்குட நல்ல ஒட்டு....)




ரெண்டு பேருட முதுகும் ஒண்ணா உரசிச்ச்சா........



(அடுத்தநாள் தாஜ்மஹால் போனத பத்தி அப்புறமா சொல்றேன்)

1 comment:

  1. ///டிரைவர் அழகா சிகரட் புகச்சிட்டு நின்னான்..........
    ///

    உங்க ரசனைக்கு ஒரு அளவே இல்லப்பா....

    ReplyDelete

நல்லா தலையில உரைக்குற மாதிரி சொல்லுங்க