நான் இங்கே பதிவிடும் பதிவுகளில் , எனது சொந்த ஆக்கம், மற்றவர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட ஆக்கம் , ரசித்தவை , அனுபவித்தவை, படித்தவை, மற்றும் எனக்கு எதாவது ஒரு தருணத்தில் உபயோகப்படும் என நான் நினைக்கும் விடயங்கள் (மற்றவரின் ஆக்கங்கள்) போன்ற அனைத்தும் அடங்கும்.



தூற்றுபவர் தூற்றட்டும் போற்றுபவர் போற்றட்டும், நான் எனது வழியில் முன்னேறி செல்வேன்.

Tuesday, October 25, 2011

உக்ரைன் பயணம் பார்ட் 3 (கொழும்பு - டெல்லி )

 உக்ரைன் பயணம் பார்ட் 3 (கொழும்பு - டெல்லி )



வணக்கம் மக்காஸ் எப்படி இருக்கீங்க ????? தமிழ் மணம் சண்டை எல்லாம் எப்படி போகுது ???


ஹிஹி குசலம் விசாரிக்கனுமாமே அதான் இப்படி எல்லாம்.......



அப்புறம் என்ன விசயம் எண்டு கேக்குரின்களா?  விசயம் பெருசா ஒன்னும் இல்லைங்கோ....... நான் உக்ரைன் போன கதைய சொல்லலாம் எண்டு தான் வண்தேனுங்கோ ,,,


இந்த விசயம் பத்தி ஏற்கனவே ரெண்டு பதிவு போட்டாச்சு... அத படிக்கனும்னா  இங்க கிளிக்குங்க ......1,2



நான் டெல்லி போனது வர உங்களுக்கு சொல்லிட்டேன்,,,,,

இப்போ சொல்லப்போறது டெல்லி ல நடந்த விசயங்கள் பத்தி..........





டான் டான் டான் டான் டான் எண்டு நைட்டு பன்னிரண்டு மணி அடிக்குற நேரத்துல, நாங்க டெல்லி ல கால்  வாச்சம்.(ஆமா இவரு நீல்  ஆம்ஸ்ட்ராங் பாரு கால்  வச்சாராம்)






அப்புறம் விமான நிலையத்துல வழக்கமான சோதினை எல்லாம் முடிச்சிட்டு அங்கேயே இருக்க எயார்டெல் பூத் ல நம்ம வீட்டுக்கு கால் பண்ணி நம்ம சுகமா(லக்மாளி கூட) வந்து சேர்ந்தத சொல்லியாச்சு


அப்போல்லாம் இலங்கைல எயார்டெல் இல்லை  ஆனா வெகு சீக்கிரம் இலங்கைக்கு வருவம் எண்டு அறிவிச்சு இருந்தாங்க

அதனாலேயே எயார்டெல் மேல ஒரு காதல் வந்திட்டு, சோ எயார்டெல் ல பேசினது ஏதோ லாற்றி அடிச்ச மாதிரி சந்தோசம்.......



அப்புறம் விமானநிலையம் உள்ளே இருக்க ஏதோ ஒரு டேக்சி சர்வீஸ் ல நாங்க போகவேண்டிய இடமான டெல்லி ரெயில்வே ஸ்டேசன் கு போறதுக்கான டேக்சி புக் பண்ணினம்,

அவனும் காச வாங்கிக்கிட்டு, வெளிய போங்க, மஞ்சள் கலருல டாட்டா இண்டிகோ நிக்கும், இது தான் டிரைவர ட நம்பர் எண்டு சொல்லி ஒரு ரசீது தந்தான்....


அந்த ரசீதையும் பாக்கெட்டுல பத்திரப்படுதிட்டு, விமான நிலையத்த சுதி பாக்கணுமே எண்டு பீட்டர் கிட்ட சொன்னேன்,(நமக்கு விடுப்பு பாக்குரது எண்டால்  அலாதி பிரியம்)


ஆனா என்கூட  வந்த ரெண்டு மாடுங்களும் நித்தா வருது சோ போகலாம் நு சொல்லிட்டாங்க (கிராதகா)
(ஏற்கனவே 2 ஜீவனும் பிளைட் ல செம தூக்கம்)




அப்புறம் என்ன நான் என்னட மூஞ்சிய  அஷ்டகோணல் ஆக்கிட்டு வெளிய வரவே மனசில்லாம கார் பார்கிங் போனம்,


முதன் முதலா வெளிநாடு வந்த சந்தோசம், திரும்புற பக்கமெல்லாம் ஹிந்தி மாலு , அதுல பாதி சீக்கியர் , பாக்கவே சூப்பரா இருந்துது டெல்லி விமான நிலையம்,

ஆனா அந்த ரெண்டு சோரன கெட்ட ஜென்மத்தால என்னட பராக்கு பாக்குற ஆசையெல்லாம் தவிடு  பொடியா போயிட்டு :(



அப்புறமா வெளிய வந்து பாத்தா ............ ஆத்தா.............. பாக்குற டேக்சி எல்லாமே மஞ்சள் கலருல தான் இருந்துது .. இது என்ன கொடுமைடா  எண்டு நம்ம டாட்டா இண்டிகோ வ தேடினா.......


அது ஒரு ஓரத்துல நின்னுது, டிரைவர் அழகா சிகரட் புகச்சிட்டு நின்னான்..........


ரசீத அவன்கிட்ட காட்டி , நாங்க மூணு பேரும் பின் சீட்லயும் பீட்டர் முன் சீட்லயும் ஏறினாரு...


அப்புறம் என்ன காரு சும்மா ஜிவ் எண்டு பரந்துது.... ஆகா இப்படி போன 5 நிமிசத்துல போயிடலாமே எண்டு நினைக்கும் போதே.... மெயின் ரோடு வந்துச்சா.......


அப்பத்தான் தெரிஞ்சுது கொழும்பு ட்ராபிக் அ விட டெல்லி ட்ராபிக் அதிக அதிக அதிகம் எண்டு.....

அப்புறம் இஞ்ச பை இன்ச் ஆ ரோடு அளந்தான் அந்த டிரைவர்..........

 நம்ம தோழமைங்க ரெண்டும் காருள் தூக்கம்....... பீட்டரும் நல்ல தூக்கம்....
நான் மட்டும் தான் அந்த டிரைவர் கூட நமக்கு தெரிஞ்ச இங்கிளிபீசு ல மொக்க போட்டேன்....




அப்புறம் ஒரு மாதிரி ரயில்வே ஸ்டேசன் கிட்ட வந்தம் ...


அப்படியே, அங்க இருக்க ஒரு மேம்பாலம் (வாரணம் ஆயிரம் ல சூர்யா கஞ்சா அடிக்குற பாலம்) தாண்டி இருக்க ரெண்டாவது ரோட்டு ல ஏதோ கிரசென்ட் டெலுக்ஸ் என்ட ஹோட்டல் ல
கார் நின்னுச்சு,


அப்புறம் நானுனம் பெரிய கஷ்டப்பட்டு நான் கொண்டு போன லக்கேஜ் எல்லாம் தூக்கிட்டு ஹோட்டல் உள்ள போனம், அப்போ ஒருத்தன் ஓடி வந்து எங்க லக்கேஜ்ஜ் எல்லாம் வாங்கினான்,

(அடடா நம்மக்கு ஒரு வேலக்கரனா எண்டு சந்தோசப்பட்டேன்)


வாழ்க்கைல முதன் முறையா ஒரு ஹோட்டல் ல ரூம் போட்டு தங்குரம் என்ட சந்தோசமும், முதல் அனுபவம் இன்னும் எவளவோ சொல்லலாம்,.....


நானும் மத்த ரெண்டு ஜீவனும் ஒரு ரூம் ல. பீட்டர் இன்னொரு தனி ரூம் ல.


எங்க ரூம் ல ரெண்டு கட்டில் இருந்துது, ஒன்னு டபல் பெட், மத்தது சிங்கள் பெட்.......


ஹிஹி உங்களுக்கு தான் தெரியுமே நான் எப்பவும் யுனிக் எண்டு,

 சோ நான் சிங்கள் பெட் ல என்ட பெட்டியெல்லாம் வச்சிட்டு, குளிக்க போயிட்டேன்..(அவங்க குளிச்ச்சு  நாரடிச்சிடுவாங்க, அதான் நான் முந்திகிட்டேன்)



குளிச்சிட்டு வந்து பாத்தா நம்ம பீட்டரு டெல்லி ஸ்பெசல் சப்பாத்தி அண்ட் பருப்பு  கறி ஆர்டர் குடுத்து வாங்கி வச்சிருந்தாரு......


நானும் குளிச்ச அலுப்பு ல அவங்க குளிக்குற கெப் ல அஞ்சு (சும்மா சொல்ல கூடாது செம டேஸ்ட்)  சப்பாத்திய முழுங்கிட்டு சொர்கலோகத்துக்கு போயிட்டேன்
( கனவுல லக்மாளி )


=======================================================================



விடிய காலம்பர எழும்பி  உக்ரைன் எம்பெச்சி போறதுக்கு தயாரானோம், (அந்த ரெண்டுபேரும் கோட் சூட் போட்டுகிட்டங்க)

நான் வழக்கம் போல அந்த நீல கலருல போனேன்... இந்த முறை ஹோட்டல் ல எங்களுக்காக ஒரு ஸ்கார்பியோ  புக் பண்ணி இருந்தாரு பீட்டரு.....


(இந்தியா விட்டு போகும் வர அந்த காரு தான் நம்ம தோழன்)

 அப்போ தான் சிங் இஸ் கிங்  படம் வந்திருந்துது, அ தனால எப்பவும் எங்க காருல அந்த படத்து பாட்டு தான் போகும்....... 













நான் காலையிலேயே பிரைட் ரயிஸ் ஆர்டர் பண்ணி சாப்பிட்டேன்,
(அந்த ரெண்டு ஜீவன்  பத்தியும் கணக்கு எடுக்குறதே இல்ல எண்டு முடிவு பண்ணிட்டேன்)

(ஏன்னா அவங்க கொஞ்சம் ரேசெர்வ் டைப் )


அவங்க நூடில்ஸ் ஆர்டர் பண்ணி சாபிட்டங்க..... நான் கீழ போய் காருல எனக்கு தேவைப்பட்ட விண்டோ சீட் ல இருந்தேன்.....

 அவங்களும் வந்ததும், கார் நேர ஒரு மெடிகல் சென்டர் ல போய் நின்னுது,(கச்சேரி ஆரம்பம்)




உள்ள போனா ஒரு கண்ணாடி போட்ட டா(dog)க்குட்டறு  நின்னாங்க.....

தனித்தனியா ஒவ்வொருவரா உள்ள கூப்பிட்டு (ஆவ்வ்வ்)

என்னட முறை வந்துது............ பயந்துகிட்டே உள்ள போனேன்....


நான் பயந்தது நடந்துது...........................


ஒரு பெரிய ஊசி போட்டு இரத்தம் டெஸ்ட் பண்ணினாங்க .......   அவ்வளவு தான்...

சின்னதுல இருந்தே எனக்கு இருக்க பழக்கம்.....


தல சுத்திச்சு,,,, அங்கேயே பத்து நிமிஷம் தூங்கிட்டேன்............( இது தான் அந்த பழக்கம் )





அப்புறம் மிச்ச மீதி இருந்த டெஸ்ட் எல்லாம் முடிச்சிட்டு ரிப்போர்ட் வாங்கிட்டு எம்பசி போனோம்........



அங்க தான் ஆரம்பிச்சுது வாழ்வுல  மறக்க முடியாத நிகழ்வுகள் எல்லாம்.......




எம்பசி ல எங்களைப் போலவே நெறைய பேரு கைல பயில் வச்சிட்டு டெண்சென் ஆ இருந்தாங்க............


பத்து பத்து பெற உள்ள விட்டாங்க.... நல்ல வேல நான் உள்ள போகும்போது அந்த ரெண்டு ஜீவனும் வரல.....

உள்ள போன ஒரே ஆனந்த இன்பம் பொங்கிச்சு (கலர் கலரா வட நாட்டு குட்டிங்க ஒரு ஆறேழு பேர் நின்னாங்க)

அப்புறம் எனக்கு இன்டர்வியு நடந்துது.......

இதுக்காக இரவு பகலா படிச்சிட்டு போனேன், ஆனா அங்க என்கிட்டே கேட்ட கேள்வி என்ன தெரியுமா?












இலங்கையில் சனாதிபதி யாரு ?

இலங்கையின் சனத்தொகை எவ்வளவு.?


இப்படி ரெண்டே ரெண்டு மொக்க கேள்விய கேட்டுட்டு (அவங்களுக்கே தெரிஞ்சிட்டு நான் மொக்க எண்டு)

இருங்க ரிசெல்ட் சொல்றோம் எண்டு சொன்னாங்க.......



இங்க தான் ஆரம்பிச்சுது அந்த இனிமை......


நான் போய் ஒரு வாங்குல இருந்தேனா...

என்னட முதுகுப்பக்கம் ஒரு பொண்ணு இருந்துச்சா....

எனக்கு பத்திகிச்சா.....

நான் சாரி சொன்னேனா.....

அவா இட்ஸ் ஓகே சொன்னாளா.....


நான் பல்லு இழிச்செனா......



அவா என்ன பத்தி கேட்டாளா.............

நான் அவல பத்தி கேட்டேனா .......

போன் நம்பர் வாங்கிகிட்டமா.............


(அப்போ ஆரம்பிச்ச பழக்கம் நான் இலங்கை வரும் வர உக்ரைன் ல அந்த பொண்ணு என்குட நல்ல ஒட்டு....)




ரெண்டு பேருட முதுகும் ஒண்ணா உரசிச்ச்சா........



(அடுத்தநாள் தாஜ்மஹால் போனத பத்தி அப்புறமா சொல்றேன்)

Monday, October 17, 2011

சீ தமிழ் மனமே ............................





தமிழ் மனம்  நிர்வாகி இந்த கொஞ்ச நாளா ஆடுற பேய் ஆட்டம் எல்லாருக்கும் தெரிஞ்சது தான்.........

நான் இந்த கொஞ்சநாளாகொஞ்சம் ( கொஞ்சம் தான் )  பிசி யா இருந்ததால அந்த சண்டையில கலந்துக்க ஏழாமபோயிட்டு  :(...

அதுக்கென்ன அதான் இப்போ வந்துட்டேன்ல..............

இத்தால் நான் அனைவருக்கும் அறியத்தருவது என்னவென்றால் ..............


ஒலிக ஒலிக


நானும் தமிழ்மனத்தோட இந்த


கீழ்த்தரமான ,

கேவலம் கெட்ட,

அசிங்கம் பிடிச்ச,

நாத்தம் பிடிச்ச,

குப்பாடித்தனமான................. ( இன்னும் எவளவோ சொல்லலாம் )


இந்தமாதிரி செயல்களால மனம் உடைஞ்சு ,,,,, தமிழ் மனத்துக்கு எதிரான போர் ல கலந்துக்கிறேன் ........


சோ நானும் தமிழ்மண ஓட்டு பட்டை, ( அது ஏற்கனவே என்கிட்டே இல்ல )

தமிழ் மன அங்கத்துவர் உரிமை ,

தமிழ் மண வளர்ச்சி உதவி அங்கத்துவம்,  ( அதாங்க ஹிட்ஸ் & அலக்சா ரேன்க்)

(நம்ம இருந்தா தானே இதெல்லாம் நடக்கும் அங்க)

எல்லா பதவில இருந்தும் ராஜினாம பண்ணுறேன்..... பண்ணுறேன் ... பண்றேன்......



சைடு குறிப்பு - தமிழ் மனம் போது பகிரங்க மன்னிப்பு கேட்கும் பட்சத்தில்...... யோசித்து முடிவு எடுக்கப்படும்.


இதோட தமிழ் மனம்காலி ஆகுமா எண்டு பொருத்து இருந்து பாப்பம்,...



இந்த  தலைப்பை சார்ந்த நமது நண்பர்களின்மனக்குமுறல்கள் கீழே ....



Click the link below and read.

1. தமிழ்மணம் ஒரு பய(ங்கர) டேட்டா...


2.. தமிழ்மணம் சரவெடி! தமிழ்மணம் என்ற போர்வையில் இருக்கும் அந்த சிங்களமணத்தை வேரறுப்போம்.


3.
தமிழ் மனங்களை புண்படுத்திய தமிழ்மணம்..!



4. தமிழ்மணத்திற்கு பொதுவில் ஓர் அறிவிப்பு!

5.
தமிழ்மணம் ‍ ஊரை விட்டு போரேன் ஊராரோ !!!



6.
தமிழ்மணமா? தமிழர்களின் மனமா?



7.
தமிழ்மணம் (???!!!!) செய்தது சரியா..



8.தமிழ்மணம் ஓட்டுப்பட்டையை நீக்க


9. மன்னிப்புக்கேள் தமிழ்மணமே..!


10. "தமிழ்மணத்தை" நீக்குவது எப்படி..?


11. தமிழ்மண பெயரிலி(பய)டேட்டா


12. அகில உலக மனநோயாளி-ன் பய (ங்கர)டேட்டா !!!! >


13. தமிழ்மணத்திற்கு நாம் அடிமையா???


14. தமிழ்மணம் சார்பாக செயல்பட்ட இரமணிதரன் அவர்களின் கேவலமான, தரம் தாழ்ந்த செயலுக்கு எல்லோரும் கடும் கண்டனத்தை தெரிவியுங்கள்


15. தமிழ்“மணத்தின்” நெடி.. குமட்டுகிறதே!


16. விளக்கம் அளிக்குமா தமிழ்மணம் ?


17. தமிழ்மணமே மன்னிப்புகேள் 2

18.தமிழ்மணம் முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்...



ஒரு வேல அந்த பெயரிலி வந்து, நீ என்ன பெரிய அப்பாடக்கரா???

நீ போனா நான் வாழ மாட்டேனா??   எண்டு கேட்டா.......



அவருக்காக நம்ம நண்பர் பாயிக் சொன்ன பதில் தான் நானும் சொல்லுவேன்



நபி இப்ராஹிம்அலை....(ஆப்ரஹாம்) அவர்களை நம்ரூத் என்ற கொடிய அரசன் மிகப் பெரிய அக்கிணிக் குண்டத்தில் தூக்கி எறிந்த போது, ஒரு ச்சின்னஞ் சிறு குருவி, தன் சொண்டில் நீரை கொண்டு போய் கொட்டியது. இதை பார்த்த மற்றைய குருவிகள், உன்னால அந்த நெருப்ப அனைக்க முடியுமா??? எதுக்கு இந்த பில்ட் அப்பு`னு கேட்ட போது, குருவி சொன்ன பதில், ”இறைவனின் தூதர் நெருப்பில் எறியப்பட்ட போது நீ என்ன செய்து கொண்டிருந்தாய்???” இறைவன் ஒரு நாள் என்னிடம் கேட்டால், என் சக்திக்குற்பட்டதை நான் செய்துவிட்டேன் என்ற பதில் என்னிடம் உள்ளது” என்றது அந்தக் குருவி.

இது போல் நானும் என் சக்திக்குற்பட்டதை செய்து விட்டேன்.



-----------------------------------------------------------------------------------------


எச்சரிக்கை- தமிழ்மணம் மட்டும் இல்ல வேற எந்த திரட்டியாவது இனிமேல் இந்தமாதிரி செஞ்சா இத விட கடுமையானஎதிர்ப்பு வரும்

Monday, October 3, 2011

விளையாட்டின் விபரீதம்

 மக்காஸ் நான் நல்லாவே கவுண்டர்இஸ்ரைக் Counterstrike 1.6  விளையாடுவேன், எங்க நாட்டுல இருக்க பிரபலமான Cs டீம் ல என்னட டீமும் ஒன்னு, ஆனாலும் இந்த விளையாட்டல வர விபரீதம் பத்தி நன் தி கேமேர் வெப்சைட் ல எழுதின ஒரு ஆர்டிகள் த சாராம்சம் இங்கே உங்களுக்காக ....
Before you people who are obsessed with video games. They did not know the steps, and entertainment has become depending on the game, for which they have paid a terrible arthritis
























உக்ரைன் பயணம் பார்ட் 2


நான் கிளம்ப வேண்டிய நாளும் வந்துது. அதுவர பாத்து பாத்து வாங்கின சாமான் சட்டி எல்லாத்தையும் எடுத்துகிட்டு ஒரு வான் ல, மொத்த குடும்பமும் விமான நிலையம் போனம்....


அங்க சன நெருக்கடி அதிகமா இல்ல, நான் வாரதாலையோ என்னமோ செக்கிங் கூட  அவ்வளவா இல்ல.....

எல்லாரும் டிக்கெட் வாங்கிகிட்டு உள்ள போனம்  தலைக்கு 200 ரூவா  டிக்கெட் காசு எண்டு புடுங்கிகிட்டாங்க ,

உள்ள போனா அங்க என்கூட  பறக்குரதுக்கு ரெடியா கிஷான் அண்ட் தினேஷ் வந்திருந்தாங்க, அவங்க ரெண்டு பெரும் சேர்ட் உள்ளவிட்டு , டை கட்டி பக்கா ஜென்டில்மேன் போல இருந்தாங்க, நான் தான் தெரியுமே வழக்கம் போல அதே டெனிம் ட்ரவுசர் , நீல கலரு புல் கை சேர்ட் (அத முழங்கை வர மடிக்குறது தான்  எனக்கு பிடிக்கும்), பிரவுன்கருப்பும் செவப்பும் கலந்த ஒரு சப்பாத்து போட்டுட்டு ஒரு கூலிங் கிளாஸ் வச்சிகிட்டு பந்தா பணினேன்,


எங்கள  கூட்டிட்டு போற பீட்டர் அன்ன வந்தாரு, எல்லா டோகுமேண்டும் சரியா இருக்கா  எண்டு பாத்துட்டு, பாஸ்போர்ட் வாங்கிக்கொண்டு எங்கயோ போய்ட்டாரு


அந்த கேப் ல நாங்க வீட்டு ஆக்களுக்கு டாட்டா காட்டிட்டு, அவங்க கண்ணீர் மல்க, ( நாங்க சிரிப்பு பொங்க ) போர்டிங் பாஸ் எடுக்க கேளம்பினோம், பீட்டரும்  வந்து சேந்துட்டாரு எங்ககூட.....

போர்டிங் பாஸ் வாங்கிகிட்டு ஏதோ ஒரு போம் நிரப்பனுமாமே  அதையும் நிரப்பிகிட்டு .........

50m தூரத்துல நின்னு வீட்டு ஆக்கள் பக்கம் திரும்பி மறுபடி டாட்டா காட்டினேன். அப்போ அம்மா அழுதத கண்டு எனக்கும் லைட் ஆ மனசு கனத்துது,........ அத வெளிய காட்டிக்கொள்ளாம  ஸ்டைல் ஆ என்னட நீல கலரு ஹெட் பேக் எ தூக்கிட்டு  நடந்தேன் .....


எங்க மூணு பேருக்கும் இதுதான் முதல் விமான பயணம் , ஆனா என்ன எனக்கு கொஞ்சம் குட பயம் இல்ல, அந்த ரெண்டு பேரும் பயத்துலையே ஒன்னுக்கு போற லெவல் ல இருந்தாங்க ......


அப்படியே போய் மிச்சம் மீதி இருக்க செக்கிங் எல்லாம் முடிச்சிட்டு
(சப்பாத்து கலட்ட சொன்ன இடத்துல தான் கோவம் வந்துது)

நான்  போர்டிங் பாஸ் தரும்போது அந்த பிகருகிட்ட நடைபாதைக்கு கிட்ட இருக்க சீட் கேட்டு வாங்கினேன், ( விண்டோ சீட் ல இருந்தாவிமானமுள்ள நடக்குறத கவனிக்க முடியாது ) அவனுங்க ரெண்டு பேரும் விண்டோ சீட் கேட்டு கிடச்ச ஒரு சீட் ல மாறி மாறி உக்கருவம் எண்டு பிளான் பண்ணிகிடாங்க

ஒருமாதிரி கிளம்புற நேரம் வரவும் விமானத்துல ஏறினோம்.....

நான் விருப்பப்பட்ட சீட் ல இருக்காம  விண்டோ சீட் ல போய் இருந்தேன், அவனுங்க வந்து கடுப்பகிட்டங்க, அப்போ நன் சொனேன் பறக்கும்பொது நான்  எதுவும் பாக்க முடியாது தானே சோ இப்போ இங்க இருக்கேன் பறந்ததும் அங்க போறேன் எண்டு சொனேன்
(ஒரே கல்லுல ரெண்டு மாங்கா  விண்டோ ல இருந்து விமானம் கிளம்புறத ரசிச்ச மாத்திரம் போச்சு, அப்புறம் விமானம் உள்ள இருக்க பிகருங்கள ரசிச்ச மாதிரியும் போச்சு)
அவனுங்களும் தலைய ஆட்டினாங்க  நம்ம ப்ளானிங் தெரிஞ்ச கொன்னு இருப்பாங்....

 அந்த விமானத்துல கூட்ட்டமே இல்ல, பாதிக்கு மேல சீட் எல்லாமே காலியா இருந்துது,,,,,,

விமானத்துல ஏறின அடுத்த நிமிசமே அந்த ரெண்டு ஜீவன்களும் செம தூக்கம், ( பணிப்பெண் அறிவுத்தல் குடுத்ததுக்கு கூட எழும்பல, செப்டி அட்வைஸ் எதுவும் கேக்கல )

நான் தான் பப்பரப்பா எண்டு அங்கயும் இங்கயும் பாது  டிவி ல போன வழிகாட்டல் அறிவுறுத்தல் எல்லாத்தையும் கவனமா ரசிச்சுகொண்டேன்.....

எனக்கு மறுபக்கம் மூண்டு பேர் இருக்க சீட் ல பீட்டர் மட்டும் தனியா இருந்தாரு,

 அவரு, ஆரம்பத்துலையே ரெண்டு பேக் சரக்கு அடிச்சிட்டு மட்டயாகிட்டறு,   ஆகா மொத்தம் அந்த மூண்டு துங்கு மூஞ்சிக்கு நடுவுல நான் மட்டும் விமானத்த அனுபவிக்க ஆரம்பிச்சேன் .....



விமானம் கிளம்புறது கூட தெரியாம இருந்தானுங்க அந்த மூணு பேரும், எனக்கோ சந்தோசம் தாங்க முடியல, முதன்முதலா பறக்கபோரம்....
ஏ  ஏ ஏ ஏ ஏ  எண்டு மனசு துல்லிச்சு,



ஒரு மாதிரி விமானமும் பரந்துச்சா அடடா என்ன அழகு, ரன்வே ல ஓடும்போது ஒரு கிக் வருமே அது எனக்கு பிடிச்சு இருந்துது..... கண் இமைக்குரதுக்குள்ள ஜிவ் எண்டு வானத்த நோக்கி போயிட்டு


வழக்கமா கொழும்பு-புத்தளம் ரோடு ல போவும்போது பாத்த விமானம் இப்போ என்னையும் சுமந்துகொண்டு பறக்குது...

இவ்வளவு நேரம் போரம் போரம் எண்டு சொன்னனே எங்க எண்டு கேட்டிங்களா ? நான் இப்போ போறது டெல்லிக்கு , அங்க தான் உக்ரைன் எம்பசி இருக்கு அதான் உக்ரைன் விசா எடுக்குரதுக்காக டெல்லி போறேன்

ஆங் எங்க விமான பணிப்பெண் பத்தி சொல்லலயே.... 

அவா பேரு லக்மாளி சூப்பர் பிகரு, அதுவும் அதிகம் சனம் இல்லாததால அவாக்கு வேலை குறைவு, 
அதால டெல்லி போய் சேரும் வர அவகுட கடலை கச்சான் பக்கோடா எல்லாம் போட்டுட்டு இருந்தேன்,

( விமானம் கெளம்பி பத்து நிமிசத்துல நான் என்னட சீட் கு  வந்துட்டேன், இது தானே என்னட ப்ளானிங், பணிப்பெண் கூட பேசணும் எண்டு தானே நன் அந்த சீட் எடுத்தது )


அப்புறம் என்ன அவா குடுத்த சாப்பாட்டையும் நல்ல  வெட்டு வெட்டிட்டு..



ரெண்டு கேன் பெப்சியையும் உள்ள தள்ளிட்டு டிவி ல போன படத்த பாத்துகிட்டே என்னட பிகர் கூட ( அதான் அந்த பணிப்பெண் ) குலவலாவா ஆரம்பிச்சேன், ( அவா இன்னும் என்னட முகபுத்தகத்துல நண்பியா இருக்கா )

இது முதல் பயணம் எண்டு சொன்னேன், அவா என்ன கூடிட்டுபோய் விமானத்த சுத்தி காட்டினாங்க ,,,,, இது எதுவுமே அந்த மூணு ஜீவனுக்கும் தெரியாது,

அப்புறம் விமானம் டெல்லி ல இறங்கும்போது இரவு பன்னிரண்டு மணி  ஏழு மணிநேர பயணம் எண்டதால கொஞ்சம் அலுப்பு... ...


டெல்லி ல என்ன நடந்து எண்டு அடுத்த பதிவுல சொல்றேன்






யாருக்காக காத்திருக்கின்றாள் இவள் ?? ?? ?? ?? ?? ?? (சொந்த அனுபவம்)

நிஸ்கி 1-  குறிப்பிட்ட இடங்களில் நம்பர் போட்டு இருக்கேன், இந்த பதிவின் இறுதியில் அந்த நம்பர் கு உரிய படங்கள் போட்டு இருக்கேன்  மேட்ச் பண்ணி பாத்துக்கங்க
======================================================================

நான் வழக்கமாக செல்லும் பாதையில் ஒரு அதிசயம் அன்று நிகழ்ந்தது,

வழக்கத்துக்கு மாறாக யாரோ என்னை கண்காணிப்பது போல் ஒரு பீளிங்கு

(தேவையாடா உனக்கு ?)

நானும் கொஞ்சநேரம் நின்னு, திரும்பிபாத்தேன் ,அப்போது தான் அவளை எங்க ஏரியா பக்கம் முதன் முதலா காண்கின்றேன்,



அதே சிவத்த உடம்பு ரொம்ப குண்டும் இல்லாம ரொம்ப ஒல்லியும் இல்லாம செம சைஸ் உடம்பு,
(சுப்பர் பிகரு எண்டு சொல்வாங்களே அப்படி)

கருப்பு கலருல பூட்ஸ், கழுத்துல வெள்ளை கலருல ஒரு அழகான செயின்.....
இதுக்கு முதலும் அவளை வேற இடத்தில் எல்லாம் கண்டு இருக்கேன்

(நம்பர்  ஒன்)

ஆனாலும் எங்க வீட்டுக்கு கிட்டவே வந்துவிடுவாள் எண்டுகனவு கூட கானல,

என மனசுல ஒருவித தயக்கம் அவளுக்கு கிட்ட போய்  தொட்டு பாக்கலாமா எண்டு.....

இன்னைக்குவேண்டாமே  எண்டு மனசுல நினச்சிட்டு  என் வழியில் போயிட்டேன்,

அடுத்த  நாள் வழக்கம் போல நான் அதே நேரம் அதே இடத்துக்கு போனேனா............!!!

நேத்து பாத்த அதே பிகரு எனக்காகவே வழிமேல் விழி வைத்து வாய பொளந்த படி நின்னாங்க. எனக்கு என்னடா இவள் எனக்காகவே இவளவு நேரமா அதுவும் இந்த காலங்காத்தால பனித்துளிகள் உடம்பை நனைத்திருக்க.........

. அப்போ தான் அவ மேல எனக்கு ஒரு இது வந்துது

சரி அடுத்தநாள் கவனிக்கலாம் எண்டு வந்துட்டேன், அவளும் நான் திசையே பாத்துட்டு இருந்தா..............



மறுநாள் நானும் அவளுக்கு எதாவது  குடுக்கனுமே என்ட ஆர்வத்துல ஒரு கடிதம் எழுதினேன், அவளுக்க்காகவே காதல் ரசம் சொட்ட சொட்ட கவிதையா எழுதினேன்....



அந்த கடிதத்தையும் எடுத்துட்டு மறுநாள் அதேநேரம் அந்த இடத்துக்கு போனேன் எனக்கு ஒரு அதிர்ச்சி  காத்துட்டு இருந்துது அவளுக்கு பக்கத்துல அவளது தோழி பச்சை கலரு டிரஸ் ள செமையா நின்னுட்டு இருந்தாள்.....(நம்பர் டூ)



ஒரே  கல்லுல ரெண்டு மாங்காய் அடிக்கலாமா எண்டும் யோசிச்சேன் ,,,, அப்புறம் மனசு மாறி ....

எனக்காகமுதன் முதலா காத்துட்டு இருந்த அந்த சிவத்த பிகருக்கு கிட்ட போனேன், 

அவளது மேனியை மெல்ல வருடினேன்......

அவளது தலையை  மெல்ல தடவினேன்.....

உடம்பு செம வளவளப்பா  இருந்துது .......

அவா எதுவுமே சொல்லாம என்ன பாத்து மெல்ல புன்னகைத்தாள் 

நானும்அந்த கடிதத்த அவளது வாயில போட்டுட்டு வந்தேன்  ( நம்பர் த்ரீ)...





 படங்கள் கீழே .....


















1
இவா தான் அந்த சிவத்த பிகரு கருப்பு பூட்சு







 2


பச்ச கலரு டிரஸ் போட்ட நண்பி



  




3



கடிதம் குடுக்குறேன்







நிஸ்கி  2-- சும்மா விளையாட்டுக்கு சார் 
நிஸ்கி  3  --- இதுபோல இன்னும் வரும்....